siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

போபா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 600 பேர் பலி: மீண்டும்

 
பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட போபா புயலுக்கு, இதுவரையிலும் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது பிலிப்பைன்சின் வடபகுதியில் 250 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இப்புயல், மீண்டும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 250 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தாக்கிய புயலின் தாண்டவத்திலிருந்தே மக்கள், இன்றளவும் வெளிவராத நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.
பல கிராமங்கள் அடியோடு நாசமாகி விட்டதால், நிவாரண பணிக்கு சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் நாடு கேட்டுக் கொண்டுள்ளது{காணொளி, }

0 comments:

கருத்துரையிடுக