siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 30 அக்டோபர், 2012

314 நாட்கள் நடந்து வந்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்த யாத்திரிகர்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah{.காணொளி,புகைப்படங்கள்}
போஸ்னியாவை சேர்ந்த யாத்திரிகர் ஒருவர், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போஸ்னியாவை சேர்ந்த செனாத் ஹெட்சிக்(வயது 47) என்பவர் பவோனிசி நகரிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிலோ எடை கொண்ட உடைமைகளுடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
314 நாட்கள், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை கடந்து தற்போது சவுதி அரேபியா வந்து சேர்ந்துள்ளார்.
வரும் வழியில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளார் செனாத். இவர் பயணம் மேற்கொண்ட டிசம்பர் மாதத்தில் பல்கேரியா நாட்டில் குளிர் மைனஸ் 35 டிகிரி என்று இருந்ததால், நிலையை சமாளிக்க முடியவில்லை.
அத்துடன் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், அந்நாட்டை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
கடைசியில் தான் நினைத்தபடி சவுதி அரேபியா வந்து, ஹஜ் பயணத்தை முடித்து கொண்டார்.