siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு கோரிக்கை

 
 
06.09.2012.by.rajah.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு மத்திய அரசிற்கு திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம்,இன்று காலை 10 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் மானமிகு துரை-சக்ரவர்த்தி நிலையத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி, நிறைவேற்றச் செய்யாமல் முட்டுக் கட்டை போடும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
‘நீரி’ என்ற தொழில் நுட்ப நிறுவனம் வகுத்துத் தந்த அந்த 6-ஏ என்ற நீர்த் தடத்திலேயே திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தினை இச்செயற்குழு வரவேற்கிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றிட கால தாமதம் செய்யும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் வாய்தா கேட்டு காலத்தை நீட்டிப்பது முரண்பட்டதும் - மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மைக்கு ஊறு விளைவிப்பதுமாகும்.
எனவே, திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது