siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

கனடாவில் 27,000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

06.09.2012.by.rajah.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 27,000 அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டும், வரிச்சுமையை குறைக்க கோரியும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு தொழிற்சங்கத்தினை சேர்ந்த 25,000 பேரும், மற்ற இரண்டு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2000 பேரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் நடந்த அதே நாளில் முதல்வர் கிறிஸ்ட்டி கிளார்க், தனது அமைச்சரவையில் மாற்றங்களை நிகழ்த்தி புதிய நிதியமைச்சரை பணியில் அமர்த்தினார். மேலும் தனது அரசு இந்தப் போராட்டத்திற்குப் பணியாது என்றும் முதல்வர் தெரிவித்தார்