siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 26 நவம்பர், 2019

குழந்தைகளை தொலைபேசி பாவனையிலிருந்து பாதுகாக்க இந்தோனேஷிய அரசின் திட்டம்

குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது வித்தியாசமில்லாமல்
 குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள்
 தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க சிரமப்படுகிறார்கள்.இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங் நகரில் ஸ்மார்ட்போன் 
பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்க நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி அரசு சார்பில் 10 பாலர் பாடசாலைகள் மற்றும் 2 உயர்நிலை பாடசாலைகயில் பயிலும் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் 
கொடுக்கப்பட்டு அதனை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.”என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று 
எழுதப்பட்டு கோழிகுஞ்சுகளின் கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.“இந்த கோழிக்குஞ்சு வளர்ப்புத் திட்டம் குழந்தைகளின் கவனத்தை ஸ்மார்ட்போன் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், விலங்குகளை
 நேசிப்பதற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களை வழிநடத்த நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.“அவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பும், 
பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் கோழிகளுக்கு உணவளிப்பார்கள். இதன்மூலம் 
அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வார்கள்
. ”இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இன் 2019 கணக்கெடுப்பில், இந்தோனேசியாவில் சராசரியாக மக்கள் தினமும் மூன்று மணிநேரம் இணையத்தில் நேரத்தை செலவிடுவதாகவும், அதில், 10 சதவீதமானோர் வலைத்தளத்தில் 10 மணித்தியாலங்களை செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக