siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வித்யாபாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்

30.09.2012.By.Rajah.கமெரா முன்பு கவர்ச்சி காட்டவே பயம் கொள்ளாத பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்.மறைந்த நடிகை சில்க் கதாப்பாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
இதன் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்புகளில் மிகவும் தைரியமாக நடந்து கொள்ளும் வித்யாவுக்கு பூனைகள் என்றால் அலர்ஜியாம்.
ஒரு தடவை கமலிஸ்தான் ஸ்டியோவில் நடந்த படப்பிடிப்பிற்காக வந்திருந்தார் வித்யா பாலன்.
பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியில் உணவு இடைவேளை வந்தது.
அப்போது தனக்குரிய கேரவனுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சில பூனைகள் உள்ளே நுழைய, மிகவும் சப்தமிட்டுள்ளார் வித்யா பாலன்.
உடனே படக்குழுவினர் விரைந்து கேரவனை திறந்து பூனைகளை விரட்டியுள்ளனர்