siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

இலங்கையில் ஆண்டுதோறும் 2000 பேர் வரை வாய்ப் புற்று நோயினால் பாதிப்பு!

 
 29 யூலை 2012,
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது..
அத்துடன் நாளாந்தம் இருவர் வீதம் உயிரிழப்பதாகவும், குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆண்களாகவே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
புகைத்தல், போதைப்பொருள் பாவனை, வெற்றிலைப் பாவனை போன்ற காரணங்களினாலேயே வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாய்ப்புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என சுகாதார கல்விப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது

0 comments:

கருத்துரையிடுக