siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட படகு விபத்து: நடுக்கடலில் பயணிகள் தத்தளிப்பு

 
 29 யூலை 2012,
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்டு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து 300 மீற்றர் கடல் எல்லை தூரத்தில் இவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், படகில் சென்றவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு, இன்று அதிகாலை காலி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் கடந்த 13ஆம் திகதி வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் பெண்கள் நால்வரும் சிறுவன் ஒருவரும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக