siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 மே, 2013

பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்?

பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அருகே புதன்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர் ராணுவ வீரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஆயுதங்களுடன் வந்ததாக ராணுவ அதிகாரி சைமன் லட்ச்ஃபோர்டு தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற லண்டனின் தென்கிழக்கில் உள்ள வூல்விச் சாலையை போலீஸார் அடைத்தனர். ராணுவ பயிற்சி முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடந்ததுள்ளது.

இத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்று செய்திகள் வெளியானாலும், இது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக