siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 மே, 2013

மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாத்தளை பிரதேச சபையின் ஐ.ம. கூட்டமைப்பு உறுப்பினரும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியுமான ஒருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிமன்ற நீதிவான் திருமதி சத்துரிக்கா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறிப்பிட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரை விசாரணையின் பின்னர் மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தப்போதே நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் வைத்திய அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

0 comments:

கருத்துரையிடுக