siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 28 மார்ச், 2015

நீராட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 10 பேர் மரணம்!!!

வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியில் புனித நீராட்டத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.   30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசம் தலைநகர் டாக்காவிற்கு வெளியே, அஷ்டமி தினமான இன்று பிரம்மபுத்திரா நதியில் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கூட்டம் அதிகமானதால் குறுகிய இரண்டு பாதையின் வழியாக ஆற்றுக்குள் செல்ல பக்தர்கள் முயற்சித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இச்சம்பவத்தில் 7 பெண்கள் 
உள்பட 10 பேர்
 சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். லாங்காபாத் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதியில் அஷ்டமியில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கமானது ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மக்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 comments:

கருத்துரையிடுக