siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 செப்டம்பர், 2012

நவீன மயமாக்கப்படும் மருத்துவப் பதிவேடுகள்

27.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவத் துறையில் "பதிவேடுகள், நோயாளி விபரங்கள், மருந்துச் சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்" போன்றவை அனைத்தும் காகித வடிவத்திலிருந்து நவீனமயமாக்கப்பட்டு கணனி வடிவத்தில் இருப்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகின்றது. கணனி பதிவுகள் மலிவானவை, குழப்பமற்றவை, நிரந்தரமானவை என்பதால் விபரங்களை CD க்களில் பாதுகாக்கப் பலரும் விரும்புகின்றனர். நோயாளியின் நோய் விபரம், அதற்காக நடைபெற்ற பரிசோதனை விபரங்கள், மருந்துப் பட்டியல் ஆகியன காகித வடிவத்திலிருந்தால் விரைவில் கிழிந்து போகும். ஆனால் CD க்களாக மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும்.
கணனி சார்ந்த மருத்துவர்கள் இந்த மருத்துவ மின் பதிவுகளின் தரத்தை உயர்த்தி செலவைக் குறைக்க முயல்கின்றனர். காகிதங்களில் பாதுகாக்கும் போது மருத்துவரின் கிறுக்கலான எழுத்துகள் தவறான மருந்துகளைப் பெற வழிவகுக்கும்.
இது போன்ற தவறுகள் மின்பதிவுகளில் ஏற்படாது. அமெரிக்காவில் மட்டும் இத்தவறுகளால் ஆண்டொன்றுக்கு 1,00,000 மரணங்கள் ஏற்படுகின்றன.
ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து பேர் வரை உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை மருத்துவத் தகவலியல் கழகத்தின் தலைவரான கிறிஸ்ட்டியன் லோவிஸ்(Christian Lovis) தெரிவித்தார்.
நல்ல தரமான சிகிச்சைக்கு நோயாளி பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மையும் துல்லியமும் மிகவும் முக்கியம் என்றார் லோவிஸ். தகவல் தெரிவித்தல் தவிர வேறு கூடுதல் பயன்கள் எதுவும் இம் மின்பதிவுகளால் இல்லை, என்றும் தெரிவித்தார்.
மின்நலவாழ்வுத் திட்டத்தில் மருந்து, நோயாளி கோப்பு, தொலை மருந்துகள், நுகர்வோர் உடல்நலத் தகவலியல், அயலக மருத்துவ சேவை, மற்றும் தொலைதூதரகத்திலிருக்கு நோயாளி குறித்த தகவல்களைச் சேகரித்து தொகுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கும்