siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 செப்டம்பர், 2012

நடிகை மீது நடன இயக்குனர் பரபரப்பு புகார்

27.09.2012.By.Rajah.கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடனம் ஆட மறுத்து, தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடன இயக்குனர்.
கன்னடத்தில் உருவாகும் படம் ரஜினி காந்தா. இப்படத்தில் துன்யா விஜய் நாயகனாகவும், ஆண்டிரிட்டா ராய் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர் மீது நடன இயக்குனர் இம்ரான் சர்தார்யா புகார் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, நயன்தாரா, திவ்யா, பிரியாமணி, ராதிகா பண்டிட், பாவனா என பல கதாநாயகிகளுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்கள் தொழிலுக்கு முரண்பட்டு நடந்தது கிடையாது.
தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா இரண்டையும் பிரித்து கையாண்டார்கள். படத்தை பொறுத்தவரை தங்கள் திறமையை வெளிப்படுத்த கடினமாக உழைப்பார்கள்.
ரஜினி காந்தா படத்திற்கான நடன காட்சிகளை முடிக்க எனக்கு குறைந்த கால அவகாசமே தரப்பட்டது. ஆனால் அதை ஆண்டிரிட்டா புரிந்து கொள்ளவில்லை.
கதாநாயகனுடன் நெருக்கமான இருக்கும் படி நடிக்க சொன்னால் பிரச்னை செய்வார். இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டுவிட்டு பகலில் படப்பிடிப்புக்கு வரும்போது தூக்க கலக்கத்துடனே வருவார்.
மேக்கப் போட்டு மறைத்தாலும் அதை மறைக்க முடியாது. ஆண்டிரிட்டாவை நடனம் ஆட வைப்பதற்குள் நரக வேதனை அனுபவித்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஆண்டிரிட்டா ராய் கூறுகையில், தேவையில்லாத காரணங்களை வைத்துக்கொண்டு என் மீது இம்ரான் குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதற்கு ஆதாரம் கிடையாது.
என் மீது இவ்வளவு புகார் சொல்பவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பே படப்பிடிப்பு நடந்த போது ஏன் சொல்லவில்லை. ஆதாரமற்ற புகார் சொல்ல அவர் ஏன் 2 மாதம் காத்திருந்தார் என்று தெரியவில்லை என்றார்.