siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

லண்டன் நர்ஸ் உடல் இந்தியாவில் அடக்கம்

 
 
கண்ணீருடன் விடைகொடுத்த கணவர் மற்றும் குழந்தைகள். (படங்களுடன்) ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 

 
 


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்

0 comments:

கருத்துரையிடுக