siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

ஹெலிகாப்டர் விபத்தில் நைஜீரிய ஆளுநர் பலி




ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விமான விபத்தில், கடுனா மாகாண ஆளுநர் பாட்ரிக் யகோவா உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டு அதிபரின் உதவியாளர் ஒருவரின் தந்தை மரணமடைந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ஆளுநர் பாட்ரிக் யகோவா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரூ அஜாஸி மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 4 பேர் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சனிக்கிழமை பயேல்சா மாகாணத்தில் உள்ள ஒகோரோபா கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு இறுதிச்சடங்குகள் முடிந்ததும், மாலையில் அதே ஹெலிகாப்டரில் ஊருக்குப் புறப்பட்டனர். ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக