siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 டிசம்பர், 2012

ஜெஸிந்தா உடல் இந்தியா வந்தது. உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி



 பிரிட்டனில் தற்கொலை செய்து கொண்ட அரண்மணையைச் சேர்ந்த இந்திய நர்சின் உடல் இன்று இந்தியா வந்தது. பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்ட தம்பதியினர். கேட்மிடில்டன் கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது குடும்பத்தைச்சேர்ந்த இந்திய நர்ஸ் ‌ஜெஸிந்தா சல்தானா (46). 7-ம் எட்வர்டு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம தேதியன்று இளவரசி கேட் மிடில்டன் உடல்நிலை குறித்து தொலை பேசி வாயிலாக ஆஸ்திரேலிய எப்.எம். ரேடியோ வர்ண‌னையாளர்கள் இருவர் விஷமத்தனமாக பேசியதால், ‌அதிர்ச்சியடைந்த ஜெஸிந்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பிரிட்டன் அரண்மணையை அதிர்ச்சியடைய வைத்தது{.புகைப்படங்கள்}.

 


இந்நிலையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்ட ஜெஸிந்தா உடல் லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தது .பின்னர் மும்பையில் இருந்து இன்று மாலை கர்நாடகா மாநிலம் மங்களூரு வந்தது. உடுப்பி மாவட்டம் ஷிர்வா சர்ச்சில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெஸிந்தா உடல் வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெஸிந்தாவின் உடலை பார்த்து கணவர்,குழந்தைகள், உறவினர்கள கண்ணீர் விட்டுஅழுதனர்.
உடுப்பியில் அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது

0 comments:

கருத்துரையிடுக