siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 7 பேர் பலியாயினர், 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெஷாவரில் உள்ள விமான நிலையம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடைபெற்றது. இச்சம்‌பவத்தில் தாக்குதல் நடத்திய ஐந்து பேர் பலியாயினர் என கைபர் மாகாணத்தை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இப்திகார் ஹூசைன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதல் ராக்கெட் குண்டு விமான ஓடுதளத்திலும் மற்றொன்று வெளிப்பகுதியிலும் வெடித்தது என கூறினார்.
மேலும் காயமடைந்தவர்கள் விமான நிலையம் அருகே உள்ள கைபர் டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நி‌லமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து விமான நிலைம் பாகிஸ்தானின் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது{புகைப்படங்கள், }.






0 comments:

கருத்துரையிடுக