siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கப்பல் கவிழ்ந்து 18 பேர் சாவு?

கிரேக்கக் கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்; 9 பேரை காணவில்லை.
துருக்கியிலிருந்து கிரேக்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுவோர் ஆபத்தான கப்பல் பயணத்தை மேற்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 28 பேர் கொண்ட குழு துருக்கியிலிருந்து, கிரேக்கத்துக்கு கப்பலில் சென்றது. லெஸ்வோஸ் தீவு அருகே அக்கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 9 பேரை காணவில்லை. உயிர் பிழைத்த 20 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கப்பலில் பயணம் செய்த அனைவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக