siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 10 அக்டோபர், 2012

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற

     
.Wednesday10 October2012 ,By.Rajah.இலங்கை அகதிகள் 60 பேர் இந்தியாவில் கைதுபடகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, இராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் ‌தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19, சிறுவர்கள் 7, சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர்.
இதில் அகதிகள் குழுவை‌ சேர்ந்த ஐந்து பேர் பொலிஸ் விசாரணையில் தப்பிச் சென்றது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்