siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

இலங்கையில் இரண்டரை வருடங்களுள் 9412 பேர் தற்கொலை! ஆண்களே அதிகம்

 
 
By.Rajah.இலங்கையில் பல காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வோரின் தொகை அதிகரித்துச் செல்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்அறிக்கையின்படி தற்கொலைகள் தொடர்பான விபரம் வருமாறு:
2010ஆம் ஆண்டு, ஆண்கள் 2914 பேரும் பெண்கள் 950 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011 இல் ஆண்கள்- 2939, பெண்கள்-831, 2012 இல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் ஆண்கள்-1381பேர், பெண்கள்- 397 பேரும் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களின்படி ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அத்துடன் 40 தொடக்கம் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2011ம் ஆண்டில் 16 வயதிற்கும் குறைந்த 41 ஆண் சிறுவர்களும் 77 சிறுமியர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, காதல், தொழில் பிரச்சினை, மன உலைச்சல் உள்ளிட்ட காரணங்கள் அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளத