siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு

 
By.Rajah.
யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நோயாளி ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் இன்னொரு பெண்ணிடம் திருமண மோதிரம் மற்றும் சங்கிலி என்பனவும் இன்னொரு பெண்ணிடம் 1100 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோயாளர் விடுதியில் இவ்வாறு திருட்டு இடம்பெற்ற சம்பவம் நோயாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது