siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் காகங்கள்: ஆய்வில் புதிய தகவல்


By.Rajah.மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்வதும், அவர்களுடன் பழகி அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியும் காகங்களுக்கு உண்டு என்று புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில், அணிலின் மூளையைப் போன்றே காகங்களின் மூளையின் அமைப்பும் அமைந்துள்ளது கண்டறியப்பட்டது.
காகங்களுடன், மனிதர்கள் சிலரை ஒன்றாக பழக வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஒன்றாக பழகியவர்களைப் போன்று மற்றொருவர் மாஸ்க் அணிந்து காகத்தின் அருகில் சென்றால் அவை அவர்களை நிராகரித்து விடுவதும், தங்களுடன் பழகும் நபர், வேறொரு மாஸ்க் அணிந்திருந்தாலும், அவரிடம் நெருங்கி செல்வதும் காகங்களின் முக அடையாளம் காணும் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பறவைகளைப் பற்றி நடத்திய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது