siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 ஆகஸ்ட், 2012

நடிகையின் ஹோட்டலில் விபசாரம் மூன்று பெண்களுடன் சார்ஜனும் கைது

25.07.2012.நடிகையொருவருக்கு சொந்தமான ஹோட் டலொன்றில் மிகவும் ரகசியமாக மேற் கொள்ளப்பட்டுவந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள் அடங்கலாக மூவரை பாணந்துறை வலானை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகைக்கு சொந்தமான குறித்த ஹோட்டலில் விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திவருவதாக வலானை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அக் ஹோட்டலை சோதனையிடுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்றதன் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபசாரம் நடைபெற்றதாக கூறப்படும் அந்த ஹோட்டலில் ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் முகாமையாளராக இருந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள இரு பெண்களில் ஒருவருக்கு ஒரு வயதில் குழந்தையொன்றும் இருந்துள்ளது. அக்குழந்தையை ஹோட்டல் முகாமையாளரான சார்ஜண்ட் தாய் விபசாரத்தில் ஈடுபடுகின்றபோது கண்காணிப்பில் வைத்திருந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் விசாரணைக்குட்படுத்திவரும் பாணந்துறை வலானை பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்