siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 ஆகஸ்ட், 2012

சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு


25.08.2012.
 

சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில்  ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ரிஆஸ் அருவியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இலங்கை அகதிகள் காணாமல் போயினர்.
அவர்களில் ஒருவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் நீச்சல் பயிற்சி வழங்கிய ஆசிரியர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது கவனக்குறைவின் காரணமாகவே இவர்கள் காணாமல் போயினர் என உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு தண்டனை வழங்கப்படும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்