siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 ஆகஸ்ட், 2012

தமிழ் மாணவிகளின் மோபைல் போன் நம்பரைக் கேட்கும் இராணுவத்தினர் !

 
25 .08. 2012 .
புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், கடந்த சில வாரங்களாக தமிழ் பெண்களோடு அதிகளவில் உரையாடிவருவதாகவும் , டியூசன் சென்று திரும்பும் மாணவிகளின் மோபைல் போன் இலக்கத்தைக் கேட்டு கடும் தொந்தரவுகள் கொடுப்பதாகவும் கூற்ப்படுகிறது. சிவில் உடையில் ஆயுதங்கள் தாங்கி நிற்கும் இராணுவத்தினர், வீதிகளில் செல்லும் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து, பெரும் சேஷ்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மாணவிகள் வரும் சைகிளை மறிப்பதும், அவர்களோடு தமிழில் உரையாடி அவர்களின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டுகின்றனர். பின்னர் தொலைபேசி இலக்கத்தை தந்துவிட்டுச் செல்லுமாறு இவர்கள் கோருவதாகவும் தமிழ் மாணவிகள் பலர் தமது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பல பெற்றோர், தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் முறையிட்டுள்ளனர். தமது பிள்ளைகள் பாதுகாப்பாகச் சென்று வர ஆவன செய்யுமாறு பெற்றோர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்