siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்:,,


ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அன்பர் மாகாணத்தில் நேற்று 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹவிஜா நகரில் உள்ள சன்னி பிரிவினர் முகாமின் மீது ஈராக் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 170 பொதுமக்கள் பலியாகினர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக சன்னி தீவிரவாதிகள் மேற்கு மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
நேற்று, அன்பர் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது அன்பர் மாகாணத்தின் ரமாடி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
 

0 comments:

கருத்துரையிடுக