siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 21 ஜூலை, 2013

பீயர்போட்டி சோகத்தில் முடிவடைந்தது ??


உலகில் நாட்டுக்கு நாடு பல்வேறு வித்தியாசமான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
இதேபோன்று ஸ்பெயின் நாட்டின் முர்சியா மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பல்வேறு நபர்கள் பாட்டில், பாட்டிலாக பீர் பானத்தை வயிற்றுக்குள் தள்ளினர்.
இதில் கிராசிகா(வயது 45) என்பவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர் பீர் குடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆனால் இந்த வெற்றி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை, போட்டி முடிந்ததுமே இடைவிடாது வாந்தி எடுத்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், எவ்வித பலனும் இல்லாமல் போனது.
கோலாகல ஆரவாரத்துடன் நடைபெற்ற போட்டி இறுதியில் சோகத்தில் முடிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

0 comments:

கருத்துரையிடுக