இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோயின் மூன்று உதவியாளர்கள் விலைமாதர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
17 வயதான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கென பணம் வழங்கிய குற்றச்சாட்டில் சில்வியோ பெர்ஸ்கோனிக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தம்மீதான குற்றச்சாட்டை சில்வியோ பெர்லஸ்கோனியும், குறித்த 17 வயதுப் பெண்ணும் நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராகவும்
0 comments:
கருத்துரையிடுக