siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் 30 பேர் ?


ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தொடர் கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் பகத்தாத்தின் பல பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வர்த்தக வலயங்களான கராடா, சூத்ரா, டொபிச்சீ, பஹய்யா, ஸபார்னியா போன்ற பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் மட்டும் 2500 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்களில் இவ்வாறு பாரியளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஷியா இனத்தைச் சேர்ந்த பிரதமர் தங்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதாக சுனி முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக