siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 6 பிப்ரவரி, 2013

பிரான்ஸ் விசா பெற முயன்ற இலங்கையர் இருவர் தமிழ்நாட்டில் கைது

தமிழ்நாடு, புதுவையில் பிரெஞ்சு தூதரகத்தில் பொய்யான பாஸ்போர்ட்டை அளித்து இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல வீசா அனுமதி கேட்பதாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இலங்கையைச் சேர்ந்த ஆண் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்ததாகவும், அந்தப் பெண் திருச்சியில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும், தங்களது உண்மையான பெயர்களை மறைத்து போலி பாஸ்போர்ட் தயாரித்து பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல விசா பெற முயற்சித்ததாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்று புதுவை மாநில பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ். ராமராஜு தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக