siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 24 நவம்பர், 2012

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் !


மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தடைவிதிப்பது ஒரு மனிதவுரிமை மீறலாகும் என்பதை நெருக்கடிகளுக்கான சர்வதேச குழுவின் அறிக்கை புலப்படுத்துவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போரில் உயிரிழந்தவர்களை பயங்கரவாதிகள் என அரசாங்கம் வரையறுத்தாலும் பெற்றோருக்கு அவர்கள் பிள்ளைகள் என்பதை அரசு மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட் டியுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் நினைவாக அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என நெருக்கடிகளுக்கான சர்தேச குழு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இவ்விடயம் குறித்துக் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த அறிக்கையில் மாவீரர் தினத்தை மக்கள் அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என குழு தெரிவித்திருக்கின்றது. இது இன்று தமிழ் மக்களுடைய மனங்களில் அடக்கப்பட்டிருக்கும் விடயத்திற்கு சற்றே அறுதலளிப்பதாக இருக்கின்றது.
யுத்தத்தில் உயிரிழந்து போனவர்கள் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்னும் பார்க்கும் அரசாங்கம் அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் பெற்றோர், உறவுகள், நண்பர்கள் இருப்பதையும் உயிரிழந்து போன தங்கள் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் அரசு மறுக்கிறது.
இறந்தவர்களை தெய்வங்களாக கருதி நடுகல் வழிபாட்டை எங்கள் மூதாதையர்கள் ஆரம்பித்தார்கள். அதன் தொடர்ச்சியைத் தான் நாங்கள் கடந்த காலங்களில் செய்தோம். இது எங்கள் உணர்வுகளுடன் தொடர்புபட்டதொரு விடயம். இங்கே இனவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் இடம் கிடையாது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் என நெருக்கடிகளுக்கான சர்வதேச குழு விடுத்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது என்றார்

0 comments:

கருத்துரையிடுக