siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 7 ஜனவரி, 2013

ரசாயன ஆலையின் கழிவுகள் கலந்ததால், குடிநீர் சப்ளை உடனே?

   

சீனாவில் உள்ள ஒரு ஆற்றில், ஆலையில் இருந்த கசிந்த ரசாயனம் கலந்ததால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. சீனாவின், ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஆலையில், குழாய் உடைந்து, "அனிலைன்' என்ற ரசாயனம், சுவாசாங் என்ற நதியில் கலந்தது.

இந்த நதியின் தண்ணீர், சாங்கி நதியில் இணைந்தது. ஹீபி மாகாணத்தில் உள்ள ஹான்டன் நகருக்கு, சாங்கி நதி தண்ணீர் தான், குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் ரசாயனம் கலந்த செய்தியை கேள்விப்பட்ட, ஹான்டன் நகர நிர்வாகம், உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தியது.
பூச்சி கொல்லி மருந்து மற்றும் வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படும், "அனிலைன்' ரசாயனம், விஷ தன்மை வாய்ந்ததால், ஆற்று தண்ணீர், அணைக்கு சென்று சேராதவாறு, திசை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக