siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 27 மார்ச், 2013

மக்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்: சர்தாரியின் மகன்

தந்தையுடன் ஏற்பட்ட மன வேற்றுமை காரணமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.வரும் மே மாதம் 11ம் தேதி பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நட்சத்திர பிரசாரகர் என கருதப்படும் பிலாவல் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்காதது, பாகிஸ்தானில் பள்ளி மாணவி தாக்கப்பட்ட விவகாரம், குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட சில மனவேறுபாடு காரணமாக அவர் தந்தையுடன் தகராறு செய்து கொண்டு துபாய் சென்று விட்டதாக பிலாவலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'தேர்தலில் ஓட்டு போட நேர்ந்தாலும் இனி பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்' என பிலாவல் கூறியதாகவும் தெரிய வருகிறது

0 comments:

கருத்துரையிடுக