siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 மே, 2013

செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில்


ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
விண்வெளியில் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டு செயலிழந்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் ஒன்றின் மீது இந்த பெகாசஸ் செயற்கைக் கோள் மோதியதிலிருந்து அந்நாட்டின் விண்வெளி நிலையத்திற்கு சரியாக சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று அம்மையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், தொடர்ந்து விண்வெளியில் சுற்றி வருவதால் அது பழுதடைந்தது குறித்து இன்னும் சரிவரத் தகவல் தெரியவில்லை.
பூமியைச் சுற்றி வருகின்ற செயற்கைப் பொருட்களைக் கண்காணிக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூட்டு விண்வெளி செயல்பாட்டு நிர்வாக மையம், ரஷ்ய ராக்கெட்டுடன் நேரடியான மோதல் எதுவுமில்லை என்றும் அதன் சிதறிய துண்டுகளுடன் பின்னர் மோதியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஈக்குவடார் நாட்டின் விண்வெளி நிலையத் தலைவரான ரோன்னி நடேர், பெகாசஸ் செயல்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு மக்களுக்கான செயற்கைக்கோள் இயங்கி வருவதாகவும் இணையதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 

0 comments:

கருத்துரையிடுக