துருக்கி நாட்டை உளவு பார்க்க வந்த பறவையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்டை நாடுகளை உளவு பார்ப்பதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துருக்கி நாட்டை உளவு பார்க்க பறவை ஒன்று எலாஷிக் மாகாணத்தின் அல்டினால்யா கிராமத்தில் வித்தியாசமாக பறந்து கொண்டிருந்தது.
அதைப்பார்த்த மக்கள் கிராம அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவே உடனே அவர்கள் அந்த பறவையை பிடித்தனர்.
அதன் உடலில் ஒரு உலோகத்தினால் ஆன வளையம் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த வளையத்தில் “24311 டெல் அவி வுனியா இஸ்ரேல்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
எனவே, எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவபரிசோதனை எடுத்து பரிசோதிக்கப்பட்ட பின்பு, மீண்டும் பறவை பறக்கவிடப்பட்டது.
துருக்கியை உளவு பார்க்க இஸ்ரேல் இப்பறவையை அனுப்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்
0 comments:
கருத்துரையிடுக