siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

240 கி.மீற்றர் வேகத்தில் சூறையாடும் உசாகி!


பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானை உசாகி என்ற கடுமையான சூறாவளி தாக்கி வருகிறது. பலத்த மழை, அதிவேக சுழற்காற்று ஆகியவை காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக, பயிர்கள்

கடுமையாக சேதம் அடைந்துள்ளன. தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை. இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு

அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு காரணமாக ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. மணிக்கு 240 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை பொழிவு 1.2 மீட்டர் என்ற

அளவில் பலமாக உள்ளது. இந்த சூறாவளி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ஹாங்காங் அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர்
 

0 comments:

கருத்துரையிடுக