siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 24 ஜூலை, 2014

பயங்கர சூறாவளி தாய்வானில்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தாய்வானில் வீசிய பயங்கர சூறாவளி காற்று காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ்சில் கடந்த வாரம் வீசிய ரம்மாசன் சூறாவளி புயலில் சிக்கி 97 பேர் உயிரிழந்தனர்.
சீனாவையும் இந்த சூறாவளி விட்டுவைக்கவில்லை. அங்கு சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை.
இந்த நிலையில் தாய்வனை கடும் சூறாவளி புயல் நேற்று தாக்கியது.
பயங்கர சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழையும் பெய்தது. இதனால் சந்தைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பல இடங்களில் சேதம் ஏற்பட்டது.
கடற்கரை அழகை படம் எடுக்கச்சென்ற சுற்றுலா பயணி ஒருவர் மாயமாகி உள்ளார்.
மீட்புப்பணிகளில் தாய்வான் இராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக