siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 நவம்பர், 2014

குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூரன்


சீனாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் லியோஜியா கிராமத்தில் 3 பள்ளி குழந்தைகள் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாக குத்தினான்.
இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒரு குழந்தையை பரிதாபமாக இழந்தது. மேலும் 2 குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை கத்தியால் குத்திய நபர் யார்? எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்று தெரியவில்லை. அவனை போலீசார் தேடி வருகின்றனர். சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக