siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியில் !!!!


ஜப்பான், தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஒகினாவா தீவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறிதுநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக