siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 4 ஜனவரி, 2017

3.8 ரிக்டர் அளவில் இங்கிலாந்து யோக்ஷையர் கடற்பிராந்தியத்தில் நிலநடுக்கம்!

யோக்ஷையர் வடக்கு கடற்பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்காபுரோ வடக்கு கடற்பிராந்தியத்தின் கிழக்கு பகுதியிலிருந்து 100மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நிலநடுக்கத்தினால் கட்டமைப்பு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்பிராந்தியத்தில் வருடம்தோறும் 3 முதல் 3.9 ரிக்டருக்கு இடைப்பட்ட நான்று நிலநடுக்கங்கள் உணரப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 comments:

கருத்துரையிடுக