siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 ஏப்ரல், 2018

கால்பந்து போட்டி தொடக்க விழாவில் புகுந்த கரடி.பங்கேற்ற காட்சி

ரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் மாசூக் கே.எம்.வி அணிக்கும், அங்குசாட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி
 நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது, பயிற்சி பெற்ற டிம் என்ற கரடி அழைத்து வரப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி, தனது முன்னிரு கால்களை தட்டி ஒலி எழுப்பிய டிம் பின்னர், பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியை
 தொடங்கி வைத்தது.
இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் கரடியை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்ததாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி
 உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 comments:

கருத்துரையிடுக