siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர் சிறிலங்காக் கடற்படையினரால் கைது

31.08.2012.BY-rajah.கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர்கள் சிறிலங்காக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் நாள் முதல் நேற்று வரையான காலப்பகுதியில், சிறிலங்காக் கடற்படையினரால் 468 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 25ம் திகதி, திருகோமலைக் கடற்பரப்பில் வைத்து 65 தமிழர்கள் 36 சிங்களவர்களும், வடக்கு கடற்பரப்பில் மணற்காடு பகுதியில் 19 தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என மொத்தமாக 122 பேர்களும்,

26ம் திகதி கிழக்கு கடற்பரப்பில் வைத்து 52 தமிழர்களும், 28ம் திகதி பேருவள கடற்பரப்பில் 64 தமிழர்களும் 02 சிங்களவர்களும் சிலாபம் கடற்பரப்பில் 59 தமிழர்களும், 22 சிங்களவர்களுமாக மொத்தம் 147 பேர்களும்,

நேற்றுமுன்தினம் வடக்கில் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 60 தமிழர்களும் ஒரு சிங்களவரும், அதேநாள் கிழக்கு கடற்பரப்பில் வைத்து 57 தமிழர்களும், 4 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமுமாக மொத்தம் 123 பேர்களும்,

நேற்றையதினம், மட்டகக்ளப்பில் 24 பேருமாக இதுவரை கடந்த வாரத்தில் மட்டும் 468 பேர்கள் தம்மால் கைது செய்யப்பட்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை குறிப்பிட்டுள்ளது