siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 27 அக்டோபர், 2012

பணத்தை மீண்டும் ஒப்படைத்த வினோத கொள்ளையர்கள்:?

 
சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2012,By.Rajah. ( கோண்டாவிலில் சம்பவம் )
கொள்ளையடித்து சென்ற 18 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்தவர்களிடம் மீண்டும் கொள்ளையர்களே கொண்டு வந்து ஒப்படைத்த வினோத சம்பவம் கோண்டாவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 23ம் திகதி கனடாவில் வசிப்பவர் வவுனியாவிலுள்ள ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் 18 லட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது.
இதனை யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர் மூலம் அவருக்கு வழங்க முன் வந்துள்ளார். அவரும் யாழ்ப்பாணம் வந்து செல்லும் சிரமத்தால் தனது நண்பரை அனுப்பி அதனை பெற்றுள்ளார்.
இதன்பின்னர் குறித்த பணத்தை அன்றைய தினமே வங்கியில் வைப்பு செய்யுமாறு நண்பருக்கு தெரிவித்தபோதும் அவரால் வங்கி மூடும் நேரத்திற்கு முன்னர் வைப்பு செய்ய முடியவில்லை.
இதனால் வீட்டிலே பணத்தை வைத்திருந்தபோது துப்பாக்கி முனையில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அதனை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பணத்தை இழந்தவர் கோப்பாய் பொலிஸிலும் முறைப்பாடு செய்தார்.
ஆனால் அடுத்தநாள் அதிகாலை கொள்ளையடித்த வீட்டின் குப்பை கொட்டும் பகுதியில் சிவப்பு நிறபை ஒன்றில் குறித்த பணம் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த பணத்தை பறிகொடுத்தவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பணத்தை மீட்டுச் சென்றனர். அத்தோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் திரும்ப கொண்டு வந்து போட்டப்பட்டது பொது மக்கள் மத்தியில் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது.