siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 20 நவம்பர், 2012

காதல் திருமணம் செய்த வாலிபர் எரிப்பு: உறவினர் வெறிச் செயல்

பாகிஸ்தானில் காதலித்து நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்த காதலனை பெண் வீட்டு உறவுக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். பாகிஸ்தானின் முசராபாத்தில் உள்ள புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் மொகமது மஜித்.
இவர் கராச்சியைச் சேர்ந்த சமினா பீபி என்ற பெண்ணை அவளது பெற்றோரின் எதிர்ப்பை மீறி நிதிமன்ற அனுமதியுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார்.
இதனால் பெண்ணின் குடும்பத்தார் மஜித்தின் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். பொலிசார் அவரது தந்தை மற்றும் சகோதரனையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் பெண்ணின் சகோதரர் அப்துல் சட்டார் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து மஜித்தை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இதனால் மஜித் உயிருக்கு போராடிய நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடலில் 90 சதவிகித்திற்கும் மேல் எரிந்துள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஜித்தை எரித்த நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

0 comments:

கருத்துரையிடுக