siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஜப்பானில் மேலுமொரு அணு மின்நிலையம் மூடப்படும் சாத்தியம்

 
கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளினால் புகுஷிமா அணுமின் நிலையம் கசிவு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மற்ற அணுமின் உற்பத்தி நிலையங்களில் தீவிர ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திசுரூகா அணுமின் நிலையத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆய்வு செய்த போது இரண்டாவது ரியாக்டர் இருக்கும் இடம் பூமி அதிர்ச்சி ஏற்படும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே 1,160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அணுமின் நிலையம் நிரந்தரமாக மூடப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என ஜப்பான் அணுமின் உற்பத்திக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டாவது ரியாக்டர் கடந்த 1987 இல் அமைக்கப்பட்டதாகும்

0 comments:

கருத்துரையிடுக