siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 8 ஜனவரி, 2013

துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல்!

அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்எம்ஏஎஸ் அன்சாக், நேற்று நல்லிணக்க அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்ட ஜோன் ஸ்ராவிரிடிஸ், மேற்கு கடற் பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரால் ரோஹான் அமரசிங்கவை மேற்கு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்த விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது [புகைப்படங்கள்]
எச்எம்ஏஎஸ் அன்சாக் ஒரு போர்க்கப்பலாகும். இது கடற்படை ஹெலிகொப்டரை ஏற்றிச் செல்லக்கூடியது. 118 மீற்றர் நீளமுடைய இக் கப்பலில் 29 அதிகாரிகளும் 163 படையினரும் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி வரை இது இலங்கையில் தரித்திருக்கும். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல விசேட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர் என இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நேற்று முன் தினம் இரு ஜப்பானிய கப்பல்களும் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக