siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

பிஸ்டோரியஸ் காதலி கொலை வழக்கில் திருப்பம்.

காதலியைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டை ஒன்றை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பை காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்றதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிஸ்டோரியஸ் வாக்குமூலத்தில் திருடன் வந்து விட்டான் என்று கருதி சுட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அதன் பின்னர்தான் பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் பிஸ்டோரியஸின் காதலி கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது இதற்கிடையே, ரீவாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துயுள்ளதையடுத்து அதில் ரீவாவின் மண்டை ஓடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், நசுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ஒரு ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டையும் சிக்கியுள்ளதால் ரீவாவை பிஸ்டோரியஸ் முதலில் மட்டையால் சரமாரியாக அடித்துக் காயப்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிரிக்கெட் மட்டை சிக்கியிருப்பதையடுத்து பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக