siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மருத்துவராக ஆங்கிலம் அவசியம்: பிரிட்டன் ?


பிரிட்டனில் பொதுமருத்துவராகப் பணிபுரிய நோயாளிகளின் கருத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் அவசியம் என்ற உத்தரவை அரசு உறுதி செய்துள்ளது.
அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் உபானிக்கு(Daniel Ubani) ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்தன்மூலம் லீட்ஸ் பிரைமரி கேர் அறக்கட்டளை நடத்திய மருத்துவமனை இவரை வெளியேற்றியுள்ளது.
இனி இதுபோன்று நடக்க கூடாது என்பதால் ஆங்கிலம் தெரியாத மருத்துவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் இதனால் இவர்களை யாரும் வேலைக்கு அமர்த்தகூடாது எனவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது மருத்துவக் குழுவின் தலைமை நிர்வாகியான நியால் டிக்சன்(Niall Dickson) நோயாளிகளின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் சுகாதார அமைச்சர் டேன் போல்ட்டர்(Dean Royles) கூறுகையில், நாம் சொல்வது மருத்துவருக்குப் புரியும் எனவும் நம் சிரமத்தை அவர் அறிவார் என்ற நம்பிக்கை நோயாளிகளுக்கு வரவேண்டும். அதற்கு நோயாளி பேசும் ஆங்கிலத்தை மருத்துவர் புரிந்து கொள்ளும் மொழித்திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து நோயாளிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகியான கேத்தரீன் மர்ஃபி(Katherine Murphy) இதனை வரவேற்றுள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக