siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 20 மார்ச், 2013

142 வது முறையாகக் கத்தியைக் காட்டி மிரட்டும் சிறுமிகள்

142 வது முறையாகக் கத்தியைக் காட்டி மிரட்டும் சிறுமிகள்
கனடாவிலுள்ள வன்கூவர் ரயில் நிலையத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பயணிகளைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாலும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவலர் ஆனி டிரன்னான்(Anne Drennan) கூறுகையில், இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் 142 முறை கைதாகியுள்ளனர் என்றும் சிறைக்குப் போவதும் வருவதும் இச்சிறுமிகளுக்கு சகஜமாகி விட்டதால் எத்தனை முறை தண்டித்தாலும் இவர்கள் திருந்துவதாக இல்லை எனவும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் சர்ரேயிலுள்ள கேட்வே ஸ்கை ரயில் நிலையத்தில் இச்சிறுமிகள் ஒரு பெண்ணை கத்தியால் தாக்கியதால் அவரது கையில் கத்தி சீவி தசை கிழிந்து ரத்தம் கொட்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ஜாய்ஸ் நிலையத்தில் ஒரு ஆணையும் தாக்கியுள்ளனர் எனவும் தகவல் அறிந்த ரோந்துப் பொலிசார் இச்சிறுமிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து 20 செ.மீ நீளமான கத்தியை கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சிறுமிகள் மீது வழக்கம் போல் உடலில் காயம் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

0 comments:

கருத்துரையிடுக