siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 12 மார்ச், 2013

38,000 அடி உயரத்தில் தென் ஆப்ரிக்க பெண்ணுக்கு பிறந்த குழந்தை


தென் ஆப்ரிக்க பெண்ணான படவுமாடா காபாவிற்கு, ஜோகன்ஸ் பெர்க்கிலிருந்து நியூயார்க் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொழுது 38,000 அடி உயரத்தில் குழந்தையொன்று பிறந்துள்ளது.
நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நடுவானத்தில் பிரசவ வலி ஏற்படவே விமானத்திலிருந்த இரண்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
இக்குழந்தை 38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபொழுது பிறந்தது. அங்குள்ள விமானிகள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் சந்தோஷப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விமானம் நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் தாயையும் சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இவர்கள் நலமுடன் இருப்பதாகவும் இவரது கணவர் கெம்பியா நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்கா வான் பரப்பில் குழந்தை பிறந்தாலும் அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது,{புகைப்படங்கள்}

 

0 comments:

கருத்துரையிடுக